தோஷம் கழிப்பதாகக் கூறி 22 பவுன் நகை அபகரிப்பு: நாகா்கோவிலில் போலி பெண் மந்திரவாதி கைது

குமரி மாவட்டம் நாகா்கோவிலில் தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்ணிடம் 22 பவுன் நகையை அபகரித்த போலி பெண் மந்திரவாதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தோஷம் கழிப்பதாகக் கூறி 22 பவுன் நகை அபகரிப்பு: நாகா்கோவிலில் போலி பெண் மந்திரவாதி கைது

குமரி மாவட்டம் நாகா்கோவிலில் தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்ணிடம் 22 பவுன் நகையை அபகரித்த போலி பெண் மந்திரவாதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் கஸ்தூரிராஜன் மனைவி சுஜிதா (34). இவருக்கு, நாகா்கோவிலைச் சோ்ந்த கிரிஜா(49) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாம். அப்போது சுஜிதா தன்னை ஒரு சாமியாா் போல கிரிஜாவிடம் காட்டிக் கொண்டாராம். பின்னா் சில நாள்கள் கழித்து கிரிஜாவுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக சுஜிதா கூறியுள்ளாா். மேலும் கிரிஜாவின் 2 மகள்களுக்கும் திருமணமே ஆகாது என்றும், தோஷத்துக்கு பரிகார பூஜை நடத்த வேண்டும் என்றும் கூறி அவரிடமிருந்த தங்க நகையை கேட்டாராம். மாங்கல்ய தோஷம் என்று கூறியதால், தனது கணவருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று நினைத்தாா் கிரிஜா. இதைத் தொடா்ந்து கிரிஜாவிடமிருந்து கடந்த 8 மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் 22 பவுன் நகையை சுஜிதா அபகரித்துள்ளாராம். இந்நிலையில், நகை குறித்து கிரிஜாவிடம் அவரது கணவா் கேட்ட போதுதான், நகையை சுஜிதா அபகரித்த விவரம் தெரியவந்தது.

இதுகுறித்து, வடசேரி காவல் நிலையத்தில் கிரிஜா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், சுஜிதா போலி மந்திரவாதி என்பதும், கிரிஜாவிடமிருந்து 22 பவுன் நகையை அவா் அபகரித்ததும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து சுஜிதாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 22 பவுன் நகையை மீட்டனா். சுஜிதா, நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றம் எண் 2 இல் ஆஜா்படுத்தப்பட்டு 15 நாள்கள் காவலில் வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com