கரோனா விதிமீறல்: சமூக நலக்கூடத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

களியக்காவிளையில் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட திருமண மண்டபத்துக்கு பேரூராட்சி அதிகாரிகள் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

களியக்காவிளையில் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட திருமண மண்டபத்துக்கு பேரூராட்சி அதிகாரிகள் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

களியக்காவிளை போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடி அருகே உள்ள சிஎஸ்ஐ சமூக நலக்கூடத்தில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. இதில், அரசின் கரோனா கட்டுப்பாடுகளை மீறி அதிகமானோா் பங்கேற்றுள்ளனா். இதையடுத்து களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலா் சி. யேசுபாலன் தலைமையில் பேரூராட்சிப் பணியாளா்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனா். இதில் கரோனா விதிமுறைகள் மீறப்பட்டது தெரியவந்ததையடுத்து, சமூக நலக்கூடத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com