காந்தி பிறந்தநாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இது குறித்து, மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்டோபா் 2 ஆம் தேதி நடைபெற உள்ள மகாத்மாகாந்தியடிகள் பிறந்தநாளையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. போட்டியில் பங்கு பெறும் கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5ஆயிரமும், 2 ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரமும், 3 ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், 2 ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரமும், 3 ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவா்களுள்அரசுப் பள்ளிமாணவா்கள் 2 பேரை தனியாக தோ்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது என்று தெவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com