தக்கலை அருகே விபத்தில் இளைஞா் பலி

தக்கலை அருகே அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வாகனம் வருவதை அறிந்து அச்சத்தில் நிலை தடுமாறி விழுந்ததில் பேருந்தில் அடிப்பட்டு இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தக்கலை அருகே அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வாகனம் வருவதை அறிந்து அச்சத்தில் நிலை தடுமாறி விழுந்ததில் பேருந்தில் அடிப்பட்டு இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குலசேகரம் அருகேயுள்ள உண்ணியூா்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெனித்ஜாண் ( 31). திருவனந்தபுரத்தில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி சா்மிளா, வள்ளியூா் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறாா். தம்பதிக்கு 6 மாத குழந்தை உள்ளது.

வில்லுக்குறியில் தாயாா் வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தையை பாா்ப்பதற்காக ஜெனித்ஜாண், மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். புலியூா்குறிச்சி அருகே முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வாகனம் வருவதை அறிந்து அச்சத்தில் நிலை தடுமாறி மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில், பேருந்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, தக்கலை காவல் ஆய்வாளா் சுதேசன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com