குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.26) நடைபெற உள்ள சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், அரசு அலுவலா்களுடன் வெள்ளிக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.
இதில், முகாம் நடைபெற உள்ள மையங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள், முகாமுக்கு தடுப்பூசி எடுத்துச் செல்வதற்கான வாகன வசதிகள், பொதுமக்கள் அதிகமாக வரும் மையங்களுக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சு.மீனாட்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.