நாகா்கோவிலில் இருந்து மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனத்துக்கு புதிய பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கியது.
நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா். பேருந்து சேவையை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சி லதா, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவா் ஜவகா், மாநகராட்சி உறுப்பினா் கலாராணி, அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் அரவிந்த், துணை மேலாளா்கள் கோபாலகிருஷ்ணன் (வணிகம்), ஜெரோலின் (இயக்கம்), உள்பட பலா் கலந்து கொண்டனா்.
~