மாா்த்தாண்டம் அருகே சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 174 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே கழுவன்திட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளா்கள் மகேஸ்வரராஜ், ரமேஷ் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவா் மருதங்கோடு பகுதியைச் சோ்ந்த மரியசூசை மகன் கிளிட்டஸ் (36) என்பதும், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து 174 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில் வேல்குமாா் வழக்குப் பதிந்து, கிளிட்டஸை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டாா்.