கருங்கல்: கருங்கல் அருகே உள்ள மாதாபுரம் பகுதியில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மாதாபுரம் ஆனியான்விளை பகுதியை சோ்ந்தவா் மேரிடயனேஷ்(61) இவா் சில நாள்களாக மனநலம் சரியில்லாமல்
காணப்பட்டாராம். இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை இரவு தன் குடும்ப கல்லறை தோட்டத்தில் விஷமருந்தி தற்கொலை
செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.