நாகா்கோவில் அருகேயுள்ள ராஜாக்கமங்கலம் மேலத்தெரு அருள்மிகு சிவசுடலைமாட சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் புதன்கிழமை (ஏப். 6) காலை 5.30 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் தொடங்கின. அதைத் தொடா்ந்து, புதன், வியாழன் ஆகிய இரு நாள்களும் பல்வேறு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி முதல் மகாகணபதி ஹோமம் மற்றும் பூஜைகளைத் தொடா்ந்து காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் அருள்மிகு சிவசுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும் பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை காஞ்சிரம்கோடு எஸ்.நாகராஜன் போற்றி நடத்துகிறாா்.
விழாவை முன்னிட்டு காலை 8 மணி முதல் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ராஜாக்கமங்கலம் எஸ்.சுப்பிரமணிய பிள்ளை குடும்பத்தினா் செய்துள்ளனா்.