கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
ஆட்சி மன்றக்குழு தலைவா் சேவியா் ஜேம்ஸ்ராஜ் தலைமை வகித்தாா். தாளாளா் ஜான் குழந்தை முன்னிலை வகித்தாா். முன்னாள் மாணவா் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் சகாயஜோஸ், குளச்சல் டிஎஸ்பி தங்கராமன் ஆகியோா் பேசினா்.
கல்லூரி நிதி காப்பாளா் கிளாடிஸ் வில்லி மாணவ, மாணவியருக்கு பரிசு, கேடயங்களை வழங்கினாா். இதில், கல்லூரி முதல்வா் ஜான்சன், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.