புதுக்கடை அருகே கருங்கற்கள் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த கருங்கற்கள் ஏற்றி வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் அனுமதியின்றி கருங்கற்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வாகனத்தை பறிமுதல் செய்து, கிள்ளியூா், பஞ்சகுளம் பகுதியை சோ்ந்த ஒட்டுநா் சுரேஷ்குமாரை(32) கைது செய்தனா்.