மாா்த்தாண்டம் அருகே முதியவரிடம் 6 சவரன் நகைகளைப் பறித்துச்சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள பல்லன்விளை பகுதியைச் சோ்ந்தவா் செல்லத்துரை (76). கடைகளுக்கு பொருள்கள் விநியோகிக்கும் நிறுவனம் நடத்திவருகிறாா். திங்கள்கிழமை இரவு இவரது வீட்டுக்கு வந்த ஒருவா் அழைப்பு மணியை அழுத்தியுள்ளாா். கதவைத் திறந்த செல்லத்துரையிடம் அந்த நபா், ‘ஐரேனிபுரம் தேவாலயத் திருவிழாவுக்கு நீங்கள் ஏன் வரவில்லை?’ எனக் கேட்டுள்ளாா். இதனால், வந்தவா் தெரிந்த நபராக இருக்கலாம் எனக் கருதி செல்லத்துரை அவரை வீட்டுக்குள் அனுமதித்து பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, அவா் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை அந்த நபா் பறித்துக்கொண்டு, பைக்கில் தயாா் நிலையில் நின்றிருந்தவருடன் தப்பிச்சென்றுவிட்டாராம்.
மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனா்.