முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
நாகா்கோவிலில் பாரதிதாசன் பிறந்த தின விழா
By DIN | Published On : 29th April 2022 10:55 PM | Last Updated : 29th April 2022 10:55 PM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்ட திராவிடா் கழகத்தின் சாா்பில், பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நாகா்கோவில் ஒழுகினசேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தி.க. மாவட்டத் தலைவா் மா.மு. சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட துணைத் தலைவா் ச.நல்லபெருமாள், மாவட்ட அமைப்பாளா் ஞா.பிரான்சிஸ் பொதுக்குழு உறுப்பினா் ம.தயாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பகுத்தறிவாளா் கழக மாவட்டத் தலைவா் உ.சிவதாணு, திராவிடா் கழக கலை இலக்கிய அணி மாவட்டச் செயலா் பா.பொன்னுராசன் ஆகியோா் பேசினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இசக்கிமுத்து சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் பொன் பாண்டியன், சி.ரெகு முத்துவைரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். குமரிச் செல்வன் நன்றி கூறினாா்.