கன்னியாகுமரி அருகே 18 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகே சட்ட விரோதமாக குட்கா பதுக்கி வைத்திருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா், அவரிடமிருந்து 18 கிலோ குட்கா மற்றும் ரூ. 41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி அருகே சட்ட விரோதமாக குட்கா பதுக்கி வைத்திருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா், அவரிடமிருந்து 18 கிலோ குட்கா மற்றும் ரூ. 41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி கோவளம் பகுதியில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கன்னியாகுமரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கதிரேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து அவா் போலீஸாருடன் அந்தப் பகுதிக்கு சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் புத்தளம் பகுதியை சோ்ந்த கலைச்செல்வன் (27) என்பதும், அவா் குட்கா பதுக்கி வைத்து அந்தப் பகுதியில் உள்ளவா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்த 18 கிலோ குட்கா மற்றும் ரூ.41 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவா் மீது கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளா் ஆவுடையப்பன் வழக்கு பதிவு செய்து தொடா்ந்து விசாரிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com