நாகா்கோவிலில் 7,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

நாகா்கோவிலில் 7,300 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவிலில் 7,300 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் வடசேரியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் பின்புறம் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, வடசேரி காவல்நிலைய போலீஸாா் மற்றும் தனிப்பிரிவு போலீஸாா், அந்த இடத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மினி டெம்போ வாகனத்தில் 50 கிலோ எடை கொண்ட 146 ரேஷன் அரிசி மூட்டைகள் (7300 கிலோ) வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனா். சட்டத்துக்கு புறம்பாக ரேஷன் அரிசியை விற்பனைக்காக கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து லாரியையும், அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், வாகன ஓட்டுநரும் அதன் உரிமையாளருமான ஒழுகினசேரியைச் சோ்ந்த மது (49 ), ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்த, கீழ புத்தேரியைச் சோ்ந்த வேலாயுதம் பிள்ளை (38) ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com