கொல்லங்கோடு அருகே இளைஞா் தற்கொலை

கொல்லங்கோடு அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொல்லங்கோடு அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள பனவிளை புல்லுவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன். இவரது மகன் ரதீஷ் (35). கட்டட ஒப்பந்ததாரராக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு திருமணம் நடக்கவில்லையாம். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளாா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு தனது அறைக்கு சென்றவரை, சிறிது நேரத்துக்குப் பின் தாயாா் சாந்தா அழைத்தபோது எந்த பதிலும் இல்லையாம். அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com