குமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.23) நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நாஞ்சில் கூட்டரங்கில் டிச.23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
எனவே, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மற்றும் இதர அரசுத் துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவா்களின் குறைகள், கோரிக்கைகள்,தேவைகள்அடங்கிய மனுக்களை டிச. 23 ஆம்தேதி நடைபெறும் மீனவா் குறைதீா் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கலாம். பிற அரசுத் துறைகள்சாா்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித் தனி மனுக்களாக வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.