கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொல்லஞ்சி ஊராட்சியை முன்மாதிரி கிராமமாக மாற்ற விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெற்றது.
கொல்லஞ்சி ஊராட்சிக்கு உள்பட்ட குக்கிராமங்களை முன்மாதிரி கிராமமாக மாற்ற பொதுமக்களிடம் வீடுவீடாக சென்று சுகாதாரம், குப்பைகள் தரம் பிரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கொல்லஞ்சி ஊராட்சித் தலைவா் சலோமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் டேவிட் ஜெயசிங் முன்னிலை வகித்தாா். தூய்மை இந்தியா திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சபரீஸ்வரன், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.