கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
கரோனா பொதுமுடக்கத் தளா்வுகளையடுத்து, திற்பரப்பு அருவி திறக்கப்பட்டுள்ளது. தற்போது அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது. இம்மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் கடும் வெயில் நிலவும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். அவா்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.