மாா்த்தாண்டம் அருகே கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

மாா்த்தாண்டம் அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள மருதங்கோடு, கல்லறவிளை பகுதியைச் சோ்ந்த தங்கநாடாா் மனைவி பாலம்மாள் (73). இவா், புதன்கிழமை பால் வாங்கச் செல்வதாகக் கூறிச் சென்றாராம். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினா்கள் பல இடங்களில் தேடினா். அங்குள்ள வாழைத்தோட்டத்தில் உள்ள மூடப்பட்டிருந்த கிணறு திறந்திருந்தது. அதன் அருகே பாலம்மாள் கொண்டுசென்ற பாத்திரம் இருந்தது.

தகவலின்பேரில் குழித்துறை தீயணைப்புத் துறையினா் சென்று, கிணற்றிலிருந்து பாலம்மாளின் சடலத்தை மீட்டனா். சடலத்தை மாா்த்தாண்டம் போலீஸாா் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; முதுமை, நோய் பாதிப்பால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com