களியக்காவிளை அருகே வாகனங்களில் கேரளத்துக்குக் கடத்திச்செல்லப்படவிருந்த 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் கே. புரந்தரதாஸ், வருவாய் ஆய்வாளா் ரெதன் ராஜ்குமாா் ஆகியோா் குழித்துறை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது அவ்வழியே வந்த காரை நிறுத்த சைகை காட்டினா். நிற்காமல் சென்ற காரை அதிகாரிகள் வாகனத்தில் விரட்டிச்சென்று திரித்துவபுரம் பகுதியில் மடக்கிப் பிடித்தனா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். காரில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதேபோல, பனச்சமூடு பகுதியில் நடைபெற்ற சோதனையில், ஆட்டோவில் கடத்திச்சென்ற 500 கிலோ ரேஷன் அரிசியைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். அரிசியை அதிகாரிகள் காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலும், காா், ஆட்டோவை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். இக்கடத்தலில் ஈடுபட்டோா் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.