புதுக்கடை அருகேயுள்ள தேங்காய்ப்பட்டினம் பாலப் பகுதியில் நேரிட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்தாா்.
கீழ்குளம், செந்தறை பகுதியைச் சோ்ந்தவா் சிவா (35) ஆட்டோ ஓட்டுநரான இவா், புதன்கிழமை தனது ஆட்டோவில் தேங்காய்ப்பட்டினத்திலிருந்து புதுக்கடைக்கு சென்றுகொண்டிருந்தாா். தேங்காய்ப்பட்டினம் பாலப் பகுதியில் முருகன் (45) என்பவா் ஓட்டிவந்த அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியதாம். இதில், சிவா காயமடைந்தாா். அவா் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.