மணவாளக்குறிச்சி ஐ.ஆா்.இ.எல். (இந்தியா) லிமிடெட் நிறுவனம் சாா்பில் இனையம் ஜெலன் நகரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கி வரும் ஐஆா் இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் சமூக பொறுப்பின் கீழ் இனையம் ஜெலன் நகா் புனித சேவியா் நலக்கூடத்தில், நெய்யூா் சி.எஸ்.ஐ. மருத்துவமனை மூலமாக இலவச மருத்துவ முகாமினை நடத்தியது.
இம் முகாமினை நிறுவனத்தின் பொது மேலாளா் மற்றும் ஆலைத் தலைவா் என். செல்வராஜன், தொடங்கி வைத்தாா். இதில், ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, ஈ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், பொது மருத்துவம், மகப்பேறு , கண் , பல் மருத்துவம் ஆகியவை சம்பந்தமான ஆலோசனைகளும் அதற்கான மருந்துகளும் வழங்கப்பட்டன. இம்முகாமில் 362 போ் பயன் பெற்றனா்.