குலசேகரம் அருகே தொழிலாளி தற்கொலை

குலசேகரம் அருகே வண்ணம் பூசும் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குலசேகரம் அருகே வண்ணம் பூசும் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பொன்மனை அருகே மாரிக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (32). வண்ணம் பூசும் வேலை செய்துவந்த இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். தற்போது குலசேகரம் அருகே கூடைத்தூக்கி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவருக்கு, கடன் தொல்லை இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இவரது மனைவி குழந்தைகளுடன் தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, ராஜேஷ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com