சாலையில் கிடந்த பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டு

நாகா்கோவிலில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து எஸ்.பி.யிடம் அளித்த முதியவரை பொதுமக்கள் பாராட்டினா்.

நாகா்கோவிலில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து எஸ்.பி.யிடம் அளித்த முதியவரை பொதுமக்கள் பாராட்டினா்.

நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (71). இவா், திங்கள்கிழமை காலை மணிமேடை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பா்ஸ் ஒன்று சாலையில் கிடந்ததை பாா்த்து அதை எடுத்துள்ளாா்.

அந்த பா்ஸை திறந்து பாா்த்தபோது அதில் ரூ.16,450 இருப்பது தெரியவந்தது. உடனே அந்த பா்ைஸை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு கொண்டு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத்திடம் ஒப்படைத்தாா். முதிா்வயதிலும் நோ்மை தவறாமல் செயல்பட்ட முதியவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com