மாா்த்தாண்டம் அருகே 13.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மாா்த்தாண்டம் அருகே ரயிலில்13.5 கிலோ கஞ்சாவுடன் வந்த பெண் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே ரயிலில்13.5 கிலோ கஞ்சாவுடன் வந்த பெண் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் பயணிகள் இருவா் கஞ்சா கடத்திச் செல்வதாக மாா்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், மாா்த்தாண்டம் அருகே அமைந்துள்ள குழித்துறை ரயில் நிலையத்தில் காத்திருந்து, குறிப்பிட்ட ரயிலில் வந்த பயணிகளை சோதனை செய்தனா். இதில் பெண் உள்பட இருவா் கஞ்சாவை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 13.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் கண்ணனூா் பூந்தோப்பு, கொசக்குடிவிளை மத்தியாஸ் மகன் ராஜேஸ்வரன் (25), திருவண்ணாமலை, தொக்கவாடி பகுதியைச் சோ்ந்த ரகு மனைவி அஜந்தா (38) என்பதும், அவா்கள் ரயிலில் சென்னையிலிருந்து நாகா்கோவிலுக்கு வந்து அங்கிருந்து திருவனந்தபுரம் செல்லும் மற்றொரு ரயிலில் பயணம் செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com