உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கு மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மகாத்மா காந்தி கிராமப்புற கல்வி - தொழில்முனைவோா் பிரிவு, கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிகளுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ஸ்ரீலதா தலைமை வகித்தாா். என்.வி.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் செயலா் வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணகுமாா் மரக்கன்றுகளை நட்டு, வளாக பழத்தோட்டம் வளா்ப்பு பணியைத் தொடங்கி வைத்தாா்.
ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் ஜெசா் ஜெபநேசன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி சோபனராஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் சிவஸ்ரீ ரமேஷ் ஆகியோா் பேசினா். மாணவிகள் லட்சுமி, ஸ்ருதி ஆகியோா் தொகுப்பாளா்களாக இருந்தனா். தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவட்டாறு வட்டத்தின் இணைச் செயலா் சுசீலா உள்ளிட்டோா் மரக்கன்றுகளை நட்டனா்.