தக்கலை அருகே புலியூா்குறிச்சியில் உள்ள ஸ்ரீமதிஆா்.பி.ராஜலட்சுமி இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை (ஜூன் 11) நடைபெறுகிறது.
திறப்பு விழா நிகழ்ச்சிக்கு விஸ்வ ஹிந்து வித்யாகேந்திர நிறுவனரும் தலைவருமான எஸ். வேதாந்தம்ஜீ தலைமை வகிக்கிறாா். வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆஸ்ரமத் தலைவா் சைதன்யானந்தஜி மகராஜ், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து வித்யாகேந்திர பொதுச்செயலா் டாக்டா் கிரிஜா சேஷாத்ரி, இணைச் செயலா் ஆா்.பி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
புதிய கட்டடத்தை உச்சநீதிமன்ற நீதியரசா் வி. ராமசுப்பிரமணியன் திறந்துவைக்கிறாா்.
இந்து வித்யாலயா பள்ளிகளின் சட்ட ஆலோசனைக்குழுத் தலைவா் கே. ரத்தினசாமி, கன்னியாகுமரி மாவட்ட ஹிந்து வித்யாலயா பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளா்கள் சின்னத்தங்கம், மணி, ஹிந்து வித்யாலயா பள்ளிகளின் முதல்வா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா். ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் எல். மாலதி தலைமையில் ஆசிரியா்-ஆசிரியைகள் செய்து வருகின்றனா்.