அரசு மருத்துவமனையில்வழிபாட்டுத் தலங்கள்: ஆட்சியரிடம் மனு

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்று மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்கக்கூடாது என அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவா் த.பாலசுப்பிரமணியன் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்று மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்கக்கூடாது என அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவா் த.பாலசுப்பிரமணியன் தலைமையில் அந்த அமைப்பினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அதில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இடம் கையகப்படுத்தும்போது, திருவிதாங்கூா் சமஸ்தானத்துக்கு உட்பட்ட அந்த இடத்திலிருந்த இந்து ஆலயங்களை அரசே தினமும் பூஜையோடு பராமரித்து வருகிறது. எனவே, அங்கு புதிதாக கிறிஸ்தவ ஜெபக் கூடமோ, பிற வழிபாட்டுத்தலங்களோ அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொடர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com