முன்சிறை, நடைக்காவு பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழித்துறை கோட்டத்துக்குள்பட்ட முன்சிறை, நடைக்காவு துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்சிறை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூா், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், இராமன்துறை ஆகிய பகுதிகளுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது.

இதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமாநகா், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சோ்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது என குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com