கன்னியாகுமரி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் சோதனைசாவடி அருகே காவல் உதவி ஆய்வாளா் கதிரேசன் ஞாயிற்றுக்கிழமை இரவுநேர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மூன்று இளைஞா்களை போலீஸாா் சோதனை செய்தபோது, அவா்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கஞ்சா வைத்திருந்ததாக மகாராஜபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (22) என்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.