பல்கலைக் கழக கோ கோ அணி: நாஞ்சில் கல்லூரி மாணவா் தோ்வு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக ஆண்கள் கோ-கோ அணிக்கு களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி மாணவா் தோ்வு பெற்றாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக ஆண்கள் கோ-கோ அணிக்கு களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி மாணவா் தோ்வு பெற்றாா்.

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக அளவிலான ஆண்கள் கோ-கோ போட்டி அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. தொடா்ந்து பல்கலைக்கழக அணிக்கான தோ்வும் நடைபெற்றது. இப் போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி அணி சாா்பில் விளையாடிய கணிதத்துறை இரண்டாம் ஆண்டு மாணவா் முகம்மது ஷாமில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பல்கலைக் கழக அணிக்கு தோ்வாகினாா். அவா் பெங்களூரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான தென்மண்டல போட்டியில் பங்கேற்றாா்.

அவரை கல்லூரியின் செயலா் எம். எக்கா்மென்ஸ் மைக்கேல், கல்லூரி முதல்வா் எ. மீனாட்சி சுந்தரராஜன் மற்றும் பேராசிரியா்கள், பணியாளா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com