மீனவ இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

கன்னியாகுமரியில் மீனவ இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் தொடங்கி வைத்தாா்

கன்னியாகுமரியில் மீனவ இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் தொடங்கி வைத்தாா்

தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமம் சாா்பில் மீனவா் இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கன்னியாகுமரி பெரியாா் நகரில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடா் மேலாண்மை மைய கட்டடத்தில் 90 நாள்கள் நடைபெறுகிறது.

இப்பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினாா்.

நாகா்கோவில் மீன்வளத் துறை துணை இயக்குநா் காசிநாதன் பாண்டியன் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் மேரி பேசில் பிந்து உள்ளிட்ட பலா் பேசினா்.

இப்பயிற்சி முகாமில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த 40 மீனவ இளைஞா்கள் கலந்து கொண்டனா். கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் நவீன் வரவேற்றாா். குளச்சல் உதவி ஆய்வாளா் ஜாண் கிங்ஸ்லி கிறிஸ்டோபா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com