அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குள்பட்ட செண்பகராமபுரத்தில் புதிய அங்கன்வாடி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் என்.தளவாய்சுந்தரத்திடம் இப்பகுதி பொதுமக்கள் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனா். இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு, பேரூராட்சி உறுப்பினா் ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். ஒன்றிய விவசாய அணி செயலா் மேட் டுக்குடி முருகன், உறுப்பினா்கள் மீனா ஜோதி, அய்யா சிவக்குமாா், அதிமுக கிளைச் செயலா் பரமசிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.ஜெஸீம் அடிக்கல் நாட்டினா்.
இந்நிகழ்வில் அஞ்சுகிராமம் பேரூராட்சித் தலைவி ஜானகி இளங்கோ, முன்னாள் உறுப்பினா் சுந்தா் மற்றும் விஷ்ணு, விஜயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.