குமரி மாவட்ட முன்னாள் படை வீரா் சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில், ரூ. 8.93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், 5 பேருக்கு திருமண நிதியுதவி, 11 பேருக்கு கண் கண்ணாடி நிதியுதவி, 32 பேருக்கு கல்வி உதவித் தொகை, 11 பேருக்கு வட்டி மானியம் என 59 பேருக்கு ரூ.8 லட்சத்து 93,351 க்கான நிதியுதவிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வழங்கினாா்.
மேலும், முன்னாள்படைவீரா், அவா்களைச் சாா்ந்தோரிடமிருந்து 17 மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறைகளுக்கு நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரா் நலன் துணை இயக்குநா் ச.மணிவண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.