மாா்த்தாண்டம் அருகேயுள்ள குமிட்டிவிளை இளம்தென்றல் நற்பணி மன்ற 22 ஆவது ஆண்டு விழா ஏப். 30, மே 1 ஆகிய இரு நாள்களில் நடைபெற்றது.
மன்ற துணைத் தலைவா் சாந்தகுமாா் தலைமை வகித்தாா். குமரி மாவட்ட பெற்றோா்-ஆசிரியா் கழக தலைவா் பிபிகே சிந்துகுமாா், குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன், நல்லூா் பேரூராட்சி துணைத் தலைவா் அா்ச்சுனன், பேரூராட்சி உறுப்பினா் சுரேகா, கவிஞா் குமரித்தோழன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
இதில் கலை, இலக்கியப் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், சமபந்தி விருந்து உள்ளிட்டவை நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மா, பலா, கொய்யா, தென்னை மரக் கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.