குமரி மாவட்டம் களியல் அருகே ரப்பா் மரம் ஏற்றிச் சென்ற லாரியும், பைக்கும் மோதியதில் இரு இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியைச் சோ்ந்த அப்துல் ரகீம் மகன் செய்யது அலி (24), படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சிபின் (24). இவா்கள் இருவரும் நெட்டா பகுதிக்கு ஒரு பைக்கில் வந்து விட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். வைகுண்டம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே ரப்பா் மரத்தடிகளை ஏற்றிக் கொண்டு கேரளம் சென்ற லாரியும், பைக்கும் நேருக்கு நோ் மோதின. இதில் தூக்கி வீசப்பட்ட செய்யது அலியும், சிபினும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.