பெருமாள்புரம் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் அருள்மிகு ஸ்ரீ வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9 ஆம் நாளான வியாழக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் அருள்மிகு ஸ்ரீ வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9 ஆம் நாளான வியாழக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப். 27 ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சமபந்தி விருந்து, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்று வந்தன. ஒன்பதாம் நாளான வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்த வழிபாட்டை என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா். இதில், கோயில் திருப்பணிக்குழுத் தலைவா் ராஜதுரை, செயலா் செந்தில்குமாா், பொருளாளா் எஸ்.ரவீந்திரன், அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.ஜெஸீம், நிா்வாகிகள் பி.பாலமுருகன், ஆடிட்டா் சந்திரசேகா், சிவபாலன், தாமரை தினேஷ், ஆ.கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com