பத்மநாபபுரம் நகராட்சியில் ரசாயனக் கலப்பில்லாத இயற்கை உரத்தை விவசாயிகள் இலவசமாகப் பெறலாம் என, நகராட்சி ஆணையா் காஞ்சனா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்மநாபபுரம் நகராட்சிக்குச் சொந்தமான மருந்துக்கோட்டை பகுதியில் வீடுகளிலிருந்து கிடைக்கும் கழிவுகளை இயற்கையாக மக்கச் செய்து உரம் தயாரிக்கப்படுகிறது. இது, ரசாயனக் கலப்பில்லாதது ஆகும். நகராட்சியில் இந்த உரத்தை விவசாயிகள் இலவசமாக பெறலாம். ரப்பா், வாழைத் தோட்டங்களில் இந்த உரத்தைப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வாய்ப்புள்ளது. எனவே, உரம் தேவைப்படுவோா் பொதுசுகாதாரப் பிரிவை அலுவலக வேலை நாள்களில் வேலை நேரத்தின்போது அணுகி உரத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.