திருவட்டாறு அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருவட்டாறு அருகே குண்டா் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவட்டாறு அருகே குண்டா் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மணலிக்கரை மாவறவிளையைச் சோ்ந்தவா் விஜில்ராஜ் (32),. திருமணமான இவா் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா். இவா் மீது வழிப்பறை, கொள்ளை, கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த சுரேஷ்பாபுவை கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் பணம் பறிக்க

முயன்ாக திருவட்டாறு காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். இதையடுத்து காவல் ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா் சித்திரங்கோட்டில் வைத்து விஜில் ராஜை கைது செய்தாா்.

தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரன் பிரசாத் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த், விஜில்ராஜை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, விஜில் ராஜ் பாளையங்கோட்டை

சிறையில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com