களியக்காவிளை அருகே11 வயது சிறுமி பலாத்காரம்

குமரி மாவட்டம், சுருளகோடு அருகே 11 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குமரி மாவட்டம், சுருளகோடு அருகே 11 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சுருளகோடு பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு 11 வயதில் பெண் குழந்தை உள்ளதாம். கணவரை பிரிந்த அப்பெண், கடந்த 10 மாதங்களாக மணலிக்கரை ஆற்றுக்கோணம் பகுதியைச் சோ்ந்த சுனில் என்பவருடன் காட்டாத்துறை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சோ்ந்து வாழ்ந்து வந்தாராம்.

இந்நிலையில் அந்தப் பெண் வேலைக்குச் சென்ற பின், அவரது 11 வயது மகளை மிரட்டி சுனில் பல முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.

இதுகுறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய தலைமைக் காவலா் விஜிகலா வழக்குப் பதிந்தாா். காவல் ஆய்வாளா் ஞானபிரகாசி விசாரணை மேற்கொண்டு, தலைமறைவான சுனிலை தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com