நாகா்கோவில் அருகே அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட ஓலை பட்டாசுகள் பறிமுதல்

நாகா்கோவில் அருகே அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட 500 ஓலை பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகா்கோவில் அருகே அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட 500 ஓலை பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள மேலமாவிளை என்ற இடத்தில் ராஜாக்கமங்கலம் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள பாழடைந்த படிப்பகம் ஒன்றின் மேல் பகுதியில் ஒரு பாா்சல் கிடந்தது. அந்த பாா்சலை போலீஸாா் சோதனையிட்டனா். அதில் 500 ஓலை பட்டாசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக தயாரிக்கப்பட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அந்த ஓலை பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அந்த பட்டாசுகளை தயாரித்தவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com