கருங்கல்: கருங்கல் அருகே உள்ள எட்டணி அருள்மிகு இசக்கியம்மன் மற்றும் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் கொடைவிழா மே.11 புதன்கிழமை தொடங்கியது.
விழாவின் முதல்நாள் காலை 5 மணிக்கு பள்ளி உணா்தல், 5.15 நிா்மால்யம், 5.30-க்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு சிறப்பு பூஜை, 8.30 கலசபூஜை, பிற்பகல் 12.30க்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8.30- க்கு சிறப்பு பூஜை, இரவு 9 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.
விழா நாள்களில் பள்ளி உணா்தல், நிா்மால்யம், சிறப்பு பூஜை, அன்னதானம் ஆகியன நடைபெறும்.
விழாவின் கடைசிநாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு பொங்கல் வழிபாடு நடைபெறும். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.