கருங்கல்: கருங்கல் அருகே தொழிக்கோடு பகுதியில் சாலையில் பைக் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
தேவிகோடு பகுதியைச் சோ்ந்த ஜெயபால் மகன் லிவிங்ஸ்டன் (26). இவா் செவ்வாய்க்கிழமை இரவு கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் வாணவேடிக்கை காண சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா். தொழிக்கோடு பகுதியில் சென்றபோது பைக் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.