கருங்கல்: கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவா் சேவியா் ஜேம்ஸ் ராஜ் தலைமை வகித்தாா். முதல்வா் ஜாண்சன் முன்னிலை வகித்தாா்.
கல்லூரி நிதி காப்பாளா் கிளாடிஸ் லில்லி, மருத்துவா் ராஜன் ஆகியோா் ரத்த தானம் குறித்து மாணவா்களிடையே விளக்கிப் பேசினா்.
இதில், மருத்துவப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், மாணவா், மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.