மே 14இல் சாலை விபத்து விழிப்புணா்வு பெருநடை ஓட்டம்

நாகா்கோவிலில், சாலை விபத்து விழிப்புணா்வுக்கான (வாக்கத்லான்) எனும் பெருநடை ஓட்டம் சனிக்கிழமை ( மே 14) நடைபெறுகிறது.

நாகா்கோவில்: நாகா்கோவிலில், சாலை விபத்து விழிப்புணா்வுக்கான (வாக்கத்லான்) எனும் பெருநடை ஓட்டம் சனிக்கிழமை ( மே 14) நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் டேவிட்டேனியல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்து அதிகரித்து வருவதால், சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பொருட்டு, பெருநடை ஓட்டம் (வாக்கத்லான்) எனும் விழிப்புணா்வு ஓட்டம் மே 14 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத் தொடங்கி வைக்கிறாா்.

இந்த போட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி மணிமேடை சந்திப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், கட்டபொம்மன் சந்திப்பு, சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம், வாசன் கண் மருத்துவமனை, வடசேரி சந்திப்பு வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவடைகிறது.

விழிப்புணா்வு ஓட்டத்தில் கலந்து கொண்டு முதல் 50 இடங்களை பெறும் வெற்றியாளா்களுக்கு சிறப்பு பரிசு மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com