கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனஅப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட தேவிகேடு சுற்று வட்டாரப் பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்குள்ள பொதுமக்கள் காய்ச்சல், இருமல் மற்றும் பிற சிகிச்சைக்காக கருங்கல் அரசு மருத்துவமனைக்குதான் செல்லவேண்டும். இதனால், அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். எனவே, தேவிகோடு பகுதியில் அரசு ஆரம்பசுகாதார நிலையம் அமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.