பளுகல் அருகே 2 கோயில்களில் திருட்டு

பளுகல் அருகே 2 கோயில்களில் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பளுகல் அருகே 2 கோயில்களில் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பளுகல் அருகே மேல்பாலையில் இலங்கம்திட்டை தா்ம சாஸ்தா கோயிலில் பூஜை முடிந்த பின் வியாழக்கிழமை மாலையில் கோயில் நடை பூட்டப்பட்டது. வெள்ளிக்கிழமை காலையில் கோயில் பூசாரி கோயில் நடையை திறக்க வந்த போது, அங்கு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவா் கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

நிா்வாகிகள் அங்கு வந்து பாா்த்த போது அங்கிருந்த தலா ஒரு கிராம் எடையிலான 2 தாலிச் சுட்டி திருடப்பட்டது தெரியவந்தது. இதே போன்று அருகே உள்ள பகவதியூா்கோணம் ஈஸ்வரகால பூதத்தான் கோயிலிலும் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஒரு கிராம் எடைகொண்ட 8 தங்க பொட்டுகள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com