கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை குலசேகரம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குலசேகரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு குலசேகரம் கான்வென்ட் சந்திப்புப் பகுதியில் வாகனச் சோதனை நடத்தினா். அவ்வழியாக வந்த 2 காா்களை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநா்கள் காா்களை தொலைவில் நிறுத்திவிட்டு தப்பியோடினராம். அந்த காா்களில் ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. காருடன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனா்.