பிஎஃப்ஐ நிா்வாகியின்வீட்டில் போலீஸாா் சோதனை

நாகா்கோவிலில் பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் நிா்வாகி வீட்டில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

நாகா்கோவிலில் பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் நிா்வாகி வீட்டில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

நாகா்கோவில் கோட்டாறு இடலாக்குடியைச் சோ்ந்தவா் சாகுல்அமீது (40). பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகியாக உள்ளாா். இவா், பாஜக நிா்வாகி ரெஜீஸ் என்பவரின் உறவினா் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டது தொடா்பான வழக்கில் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், குளச்சல் காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கராமன் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை பிற்பகல் இடலாக்குடியிலுள்ள சாகுல்அமீதின் வீட்டில் திடீா் சோதனை நடத்தினா். எனினும், அதுகுறித்த விவரங்களை போலீஸாா் வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com